தமிழர்கள் விடயத்தில் கடந்த காலங்களில் தான் அரசுகள் ஒரு பக்கச்சார்பற்ற முறையில், கவனிப்பாரற்ற முறையில் நடந்திருந்தன என்று சொல்லப்பட்டாலும் கூட, இன்று உள்ள அரசாங்கமும் அதனை நிவர்த்திக்காமல்,செயற்பாடுகளை முன்கொண்டுசெல்லாத நிலையே காணப்படுவதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத் தெரிவித்தார்.
மட்டக்களப்பு – விளாவட்டவான் ராஜா விளையாட்டுக் கழகம் தனது 56 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு “விளாவூர் யுத்தம்” எனும் தொனிப்பொருளில் நடாத்திய அணிக்கு 11 போர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் காஞ்சிரங்குடா நாகஒளி விளையாட்டுக் கழகம் மகுடம் சூடியுள்ளது.
முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் திகதிகளில் படுவான்கரை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன், விளாவட்டவான் ராஜா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற குறித்த சுற்றுப் போட்டியில் 29 அணிகள் களம் கண்டிருந்தது.
இதில் கரவெட்டி ஆதவன் அணியும், காஞ்சிரங்குடா நாக ஒளி அணியும் கடந்த (03) மாலை இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தியிருந்த நிலையில் தண்ட உதை மூலம் காஞ்சிரங்குடா நாக ஒளி அணியும் வெற்றி பெற்று ராஜாவின் விளாவூர் யுத்தத்தின் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.













சுற்றுப் போட்டியில் இரண்டாம் இடத்தினை காஞ்சிரங்குடா நாக ஒளி அணியும், மூன்றாம் இடத்தினை கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா அணியும், நான்காவது இடத்தினை கொல்லநுலை விவேகானந்தா அணியும் பெற்றுக்கொள்ள சிறந்த நன்னடத்தை அணியாக நடராஜானந்தபுரம் சித்தி விநாயகர் அணியும் பெற்றுக்கொண்டது.
மற்றும் 2026 ஆம் ஆண்டு சுற்றுப்போட்டியின் நாயகனாக கரவெட்டி ஆதவன் அணி வீரர் த.ஜீவிதன் தெரிவு செய்யப்பட்டார்.
அத்தோடு சிறந்த பந்துக் காப்பாளராக கரவெட்டி ஆதவன் அணியின் பந்துக் காப்பாளர் ச.நிலுக்சனும்(அஜித்), சிறந்த பின்கள வீரராக காஞ்சிரங்குடா நாக ஒளி அணியின் விமலநாதனும் மற்றும் சிறந்த வீரராக காஞ்சிரங்குடா நாகஒளி அணியின் சிவகாந்தனும் தெரிவு செய்யப்பட்டனர்.
சுற்றுப்போட்டியில் பெற்றிபெற்ற அணிகளுக்கு வெற்றிக் கிண்ணம் மற்றும் பணப்பரிசு வழங்கப்பட்டது.
ராஜா விளையாட்டுக் கழக தலைவர் இ.அபிலாஸ் தலைமையில் நடைபெற்ற குறித்த சுற்றுப் போட்டியின் இறுதி நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத் மண்முனை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் த.கோபாலப்பிள்ளை, படுவான்கரை உதைபந்தாட்ட சங்கத்தின் நிருவாக சபையினர், விளாவட்டவான் விநாயகர் வித்தியாலய அதிபர், விளாவட்டவான் ஆலய நிருவாக சபையின் பிரதிநிதிகள், பொது அமைப்பினர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








