மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் வலயமட்ட தமிழ் மொழி தினப் போட்டி நேற்று (05) நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.
தமிழ் பாட இணைப்பாளர் பு. சதீஷ்குமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலின் கீழ், வலயக் கல்வி பணிப்பாளர் சிவசங்கரி கங்கேஸ்வரன் தலைமையில் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இப்போட்டியில் மண்முனை தென்மேற்கு, மண்முனை மேற்கு, ஏறாவூர்பற்று மற்றும் கோட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
போட்டியின் நிறைவில், முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வின் ஆரம்பத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான க. சுபாகரன், தே. உதயகரன், கோட்டக் கல்விப் பணிப்பாளர்களான எஸ். சக்திதாஸ், சி. தீபதர்சன், மூ. உதயகுமாரன் ஆகியோருடன் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.








