புதிய ஜனநாயக முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத், தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று (6) நடைபெற்ற மீட்பு, புனர்வாழ்வு மற்றும் கடனிறுக்க வகையின்மை (கூட்டிணைப்பு மற்றும் தனிப்பட்ட) சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றியபோது அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், “இலங்கையின் தற்போதைய அரசாங்கம் எவ்வாறு பல வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்ததோ, அதேபோல் தமிழ்நாட்டிலும் விஜய் பல வாக்குறுதிகளை முன்வைத்து ஆட்சியை கைப்பற்றியுள்ளார். ஆனால், அந்த ஆட்சியை தொடர்ந்து திறம்பட முன்னெடுத்து செல்ல முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது” என்றார்.
மேலும், “தமிழ்நாட்டில் தற்போது விஜய் ஆட்சிக்கு வந்துள்ளார். கச்சத்தீவு பிரச்சினையில் அவர் என்ன நிலைப்பாடு எடுப்பார் என்பது தெரியவில்லை. தேர்தல் காலத்தில் தங்கம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்தே அவர் ஆட்சியைப் பெற்றார்” என்றும் தெரிவித்தார்.
இறுதியாக, “இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார சவால்களைப் போலவே, தமிழ்நாட்டிலும் விஜய்க்கு ஆட்சியை முன்னெடுத்து செல்வதில் சிரமங்கள் ஏற்படலாம்” என சாமர சம்பத் குறிப்பிட்டார்.








