
வாகரை பிரதேச செயலாளரின் வேண்டுகோளின் பேரில், வாகரை பிரதேசத்திலுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் திறன் மேம்பாட்டிற்கான பயிற்சி நிகழ்ச்சி, பனிச்சங்கேணி அமைந்துள்ள ஏர்ன் சிலோன் சுற்றுலா விடுதியில் இன்று நடைபெற்றது.
வாகரை சமூர்த்தி அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளின் ஒத்துழைப்புடன், ஏர்ன் சிலோன் நிறுவனத்தினால் இந்த பயிற்சி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
நிகழ்வில், லண்டனில் வசிக்கும் வைத்தியர் காந்தா நிறஞ்சனின் நிதி உதவியுடன் வாகரை பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், நேர்மறை பெற்றோர்தனம் தொடர்பான விழிப்புணர்வு, தோல்வி மற்றும் கவலை காரணமாக உருவாகும் தன்னைத் தானே அழிக்கும் எண்ணங்களை தவிர்ப்பது தொடர்பான ஆலோசனைகள் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு கருத்துகளும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில், ஏர்ன் சிலோன் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கே. சதீஸ்குமார், வாகரை சமூர்த்தி அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சிகளையும் விழிப்புணர்வு கருத்துகளையும் வழங்கினர்.













