Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“நாட்டை விற்கமாட்டேன், இலங்கை எனது நாடு”; சர்ச்சைக் கருத்துக்கு அர்ச்சுனா எம்.பி விளக்கம்!

“நாட்டை விற்கமாட்டேன், இலங்கை எனது நாடு”; சர்ச்சைக் கருத்துக்கு அர்ச்சுனா எம்.பி விளக்கம்!

3 months ago
in செய்திகள்

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், செவ்வாய்க்கிழமை (05) பாராளுமன்றத்தில் தாம் வெளியிட்ட கருத்துகள் தொடர்பாக விளக்கமளித்துள்ளார்.

கச்சத்தீவுடன் யாழ்ப்பாணத்தையும் தமிழ்நாட்டிற்கு ஒப்படைக்க வேண்டும் என தாம் கூறியதாக வெளியான செய்திகள், தனது தமிழ் கருத்தை தவறாகப் புரிந்துகொண்டதன் விளைவாக உருவானவை என அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எழுந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த அவர், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இடையே கைச்சாத்திடப்பட்டதாக கூறப்படும் ஏழு ஒப்பந்தங்களை விமர்சிக்கும் வகையிலேயே தாம் அந்த கருத்தை நகைச்சுவைத் தொனியில் தெரிவித்ததாக கூறினார்.

மேலும், இலங்கையைப் பிரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தாம் எதையும் கூறவில்லை என்றும், நாட்டை நேசிப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.

“நான் எனது நாட்டை விற்க மாட்டேன். இந்த நாட்டிற்காக போராடியவர்கள் நாங்கள். இலங்கை எனது நாடு,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இந்தியாவுடன் செய்யப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் குறித்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தும் நோக்கிலேயே அந்த கருத்துகளை வெளியிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“அரசாங்கம் எல்லாவற்றையும் மோடிக்கு வழங்கப் போகிறதானால், அத்தகைய ஒப்பந்தங்களை ஆதரிப்பவர்கள் மோடியிடமே செல்லலாம்; மற்றவர்கள் தமிழ்நாட்டிற்கு செல்லலாம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா கோலாகல ஆரம்பம்
செய்திகள்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா கோலாகல ஆரம்பம்

July 25, 2026
மஹாபொல புலமைப்பரிசில் தொடர்பில் வெளியான அறிவிப்பு
செய்திகள்

மஹாபொல புலமைப்பரிசில் தொடர்பில் வெளியான அறிவிப்பு

July 25, 2026
மருதமுனை, சம்மாந்துறையில் இரு பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு
செய்திகள்

மருதமுனை, சம்மாந்துறையில் இரு பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு

July 25, 2026
மகாவலி ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
செய்திகள்

மகாவலி ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

July 25, 2026
நோர்வூட் பிரதேச சபை வாகனம் சிக்கியது; மதுபோதையில் சாரதி
செய்திகள்

நோர்வூட் பிரதேச சபை வாகனம் சிக்கியது; மதுபோதையில் சாரதி

July 25, 2026
வாழைச்சேனையிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த வாகனம் விபத்து; குழந்தைகள் உட்பட ஐந்து பேர் வைத்தியசாலையில்
செய்திகள்

வாழைச்சேனையிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த வாகனம் விபத்து; குழந்தைகள் உட்பட ஐந்து பேர் வைத்தியசாலையில்

July 25, 2026
Next Post
ஏறாவூர்பற்று-2 கல்வி கோட்டத்திலன் அகில இலங்கை தமிழ் தினபோட்டி

ஏறாவூர்பற்று-2 கல்வி கோட்டத்திலன் அகில இலங்கை தமிழ் தினபோட்டி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.