வெல்லாவெளி சின்னவத்தை பகுதியில் உள்ள வயல் நிலமொன்றில் நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் வெல்லாவெளி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஆரம்பக்கட்ட விசாரணைகளின் படி, உயிரிழந்த நபர் கடந்த 08ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர் சின்னவத்தை பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.








