மோசமான வானிலை காரணமாக ஹட்டன்–கொழும்பு பிரதான வீதியின் தியகலா பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால், அந்தப் பகுதியில் போக்குவரத்து ஒருவழிப்பாதையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
டிட்வா புயலின்போது வட்டவளை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவின் பின்னர் குவிந்திருந்த மண் அகற்றப்பட்டிருந்த நிலையில், நேற்று (10) மாலை பெய்த கடுமையான மழையால் அதே இடத்தில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் தற்போதைய நிலையில் குறித்த பகுதியில் வாகனப் போக்குவரத்து ஒருவழிப்பாதையாக மட்டுமே இடம்பெறுகிறது.
மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் தேங்கியுள்ள இடிபாடுகளை விரைவாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக நுவரெலியா மாவட்டத்தில் நிலவி வரும் சீரற்ற காலநிலையால் இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் பல பகுதிகளில் நிலம் வெடித்து அபாய அறிகுறிகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகள் மற்றும் பாதசாரிகள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
அதேபோல், குறித்த பாதையில் பயணிக்கும் சாரதிகள் பாதுகாப்பாகவும் எச்சரிக்கையுடனும் பயணிக்குமாறு நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மையம் கேட்டுக்கொண்டுள்ளது.








