இலங்கையின் முக்கிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும், பெரும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடையவருமான மனோஜ் சுரங்க லியனகே, எனப்படும் “படுவத்தே சாமர” அசர்பைஜானில் கைது செய்யப்பட்டு இன்று (மே 11) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
சர்வதேச பிடியாணை உத்தரவின் அடிப்படையில், அசர்பைஜான் பாதுகாப்பு அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், விசேட பொலிஸ் குழுவொன்றின் பாதுகாப்பில் அவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டார்.
இந்த கைது நடவடிக்கை சர்வதேச ஒத்துழைப்பின் மூலம் மேற்கொள்ளப்பட்டதாகவும், சந்தேகநபர் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.








