அம்பலாந்தோட்டை, மாமடல தெற்கு, போகுடுயாய பகுதியில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மற்றொருவர் பாரிய காயங்களுக்கு உள்ளான சம்பவம் தொடர்பில் அம்பலாந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் 34 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும், காயமடைந்தவர் அவரின் மனைவியின் தந்தை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆரம்ப விசாரணைகளின்படி, குறித்த நபரை கொலை செய்வதற்காக மூவர் அவரது வீட்டிற்கு வந்துள்ளதாகவும், பின்னர் அவரை கொலை செய்துவிட்டு உடலை துண்டித்து மாமடல சந்தியில் உள்ள ஒரு சிலையின் அருகே விட்டு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், கொல்லப்பட்டவர் கடந்த ஆண்டு ஜனவரி 2ஆம் திகதி அம்பலாந்தோட்டை அலேகொட மேற்கு பகுதியில் இடம்பெற்ற முக்கொலை சம்பவத்தின் சந்தேகநபராக இருந்ததாகவும், அந்த வழக்கில் விளக்கமறியலில் இருந்த பின்னர் கடந்த மார்ச் 30ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த முந்தைய சம்பவத்திற்கான பழிவாங்கும் நோக்கில் இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவ இடத்தில் கொலையாளிகள் கொண்டு வந்ததாக கருதப்படும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றும் கண்டெடுக்கப்பட்டு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக அம்பலாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.








