மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பசளையினை உடனடியாகப் பெற்றுத்தர ஜனாதிபதி அவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் இது எமது பணிவான வேண்டுகோள். இந்த நிலைமை மறுக்கப்பட்டால் விவசாயிகளுடன் நாங்களும் இணைந்து வீதியில் இறங்க வேண்டிய நிலையைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என மட்டக்களப்பு மாவட்ட கமக்கார அமைப்புகளின் மாவட்ட அதிகார சபையினுடைய தலைவர் சந்திரசேகரன் சந்திரமோகன் தெரிவித்தார்.

தனியார் நிறுவனங்கள் ஊடாக விவசாயிகளுக்கு உரம் விநியோகம் செய்வதற்கு அரசாங்கம் பணத்தினை வழங்கியுள்ளபோதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதனை வழங்குவதற்கு இழுத்தடிப்புகளை செய்வதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினார்கள்.
நேற்று மட்டுஊடக அமையத்தில் மட்டக்களப்பு மாவட்ட கமக்கார அமைப்புகளின் மாவட்ட அதிகார சபையினுடைய ஊடக சந்திப்பு நடைபெற்றது. இந்த ஊடக சந்திப்பில் சபையின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு கருத்துகளை தெரிவித்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட கமக்கார அமைப்புகளின் மாவட்ட அதிகார சபையினுடைய தலைவர் சந்திரசேகரன் சந்திரமோகன்,








