மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
கொழும்பு–கதிர்காமம் பிரதான வீதியின் திக்வெல்ல பொல்கஹமுல்ல பகுதியில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலைக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இன்று (13) காலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து அம்பலாந்தோட்டை திசையிலிருந்து பயணித்துக் கொண்டிருந்த வேளையில், கதிர்காமம் நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபை பேருந்துடன் நேருக்கு நேர் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.








