Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புத்தளத்தில் தொடரும் கனமழை; 30871 பேர் பாதிப்பு!

புத்தளத்தில் தொடரும் கனமழை; 30871 பேர் பாதிப்பு!

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கடும் மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு மற்றும் அசாதாரண நிலை காரணமாக 8347 குடும்பங்களைச் சேர்ந்த 30871 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட செயலாளர் வை.ஐ.எம்.சில்வா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் 6 பிரதேச செயலகப் பிரிவில் 33 கிராம சேவகர் பிரிவில் 8347 குடும்பங்களை சேர்ந்த 30871 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புத்தளம் மாவட்டத்தின் புத்தளம், ஆனமடுவ, கருவலகஸ்வெவ, பல்லம, முந்தல் மற்றும் வன்னாத்தவில்லு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள கிராமங்களில் வாழும் மக்கள் இந்த வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் புத்தளம் பிரதேச செயலகப் பிரிவில் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அங்கு 20 கிராம சேவகர் பிரிவில் 8192 குடும்பங்களைச் சேர்ந்த 30340 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ஆனமடுவ பிரதேச செயலாளர் பிரிவில் 5 கிராம சேவகர் பிரிவில் 27 குடும்பங்களை சேர்ந்த 98 பேரும், வன்னாத்தவில்லு பிரதேச செயலாளர் பிரிவில் 2 கிராம சேவகர் பிரிவில் 3 குடும்பத்தைச் சேர்ந்த 13 பேரும் , கருவலகஸ்வெவ பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரும், பல்லம பிரதேச செயலாளர் பிரிவில் 2 கிராம சேவகர் பிரிவில் 2 குடும்பத்தைச் சேர்ந்த 10 பேரும், முந்தல் பிரதேச செயலாளர் பிரிவில் 3 கிராம சேவகர் பிரிவில் 122 குடும்பங்களை சேர்ந்த 409 பேரும் பாதிக்கப்பட்டுள்ளானர்.

அத்தோடு, வெள்ளம் காரணமாக புத்தளம் மாவட்டத்தில் வன்னாத்தவில்லு பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவில் 7 வீடுகளும், வன்னாத்தவில்லு பிரதேச செயலாளர் பிரிவில் 3 வீடுகளும், கருவலகஸ்வெவ பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு வீடும், பல்லம பிரதேச செயலாளர் பிரிவில் 2 வீடுகளும் என 13 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

அத்துடன், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு 6 பாதுகாப்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு 188 குடும்பங்களைச் சேர்ந்த 584 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவில் 5 பாதுகாப்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், அங்கு 128 குடும்பங்களைச் சேர்ந்த 379 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், முந்தல் பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு பாதுகாப்பு மத்திய நிலையத்தில் 60 குடும்பங்களைச் சேர்ந்த 205 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பாதுகாப்பு மத்திய நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான சமைத்த உணவு , சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் என்பனவும் செய்துகொடுக்கப்பட்டுள்ளதாகவும் புத்தளம் மாவட்ட செயலாளர் வை.ஐ.எம்.சில்வா கூறினார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

யாழ் சொகுசுப் பேருந்துகளுக்கு எதிராக விரைவில் எடுக்கவுள்ள நடவடிக்கை
செய்திகள்

யாழ் சொகுசுப் பேருந்துகளுக்கு எதிராக விரைவில் எடுக்கவுள்ள நடவடிக்கை

August 12, 2026
ஜனாதிபதி நிதிய நிதி ஒதுக்கீடுகள் கிடைக்காததால் 25,000க்கும் மேற்பட்ட இதய அறுவை சிகிச்சைகள் தாமதம்
செய்திகள்

ஜனாதிபதி நிதிய நிதி ஒதுக்கீடுகள் கிடைக்காததால் 25,000க்கும் மேற்பட்ட இதய அறுவை சிகிச்சைகள் தாமதம்

August 12, 2026
நீதிபதிகளின் ஓய்வு வயது அதிகரிப்புக்கு முப்பீட மகாநாயக்க தேரர்கள் எதிர்ப்பு!
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வு வயது அதிகரிப்புக்கு முப்பீட மகாநாயக்க தேரர்கள் எதிர்ப்பு!

August 12, 2026
சுகீஸ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு; ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்!
செய்திகள்

சுகீஸ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு; ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்!

August 12, 2026
செம்மணி நீதியின் ஓலம் 2 போராட்டத்திற்கு வீதி நாடகங்கள் மூலம் அழைப்பு
செய்திகள்

செம்மணி நீதியின் ஓலம் 2 போராட்டத்திற்கு வீதி நாடகங்கள் மூலம் அழைப்பு

August 12, 2026
மட்டக்களப்பில் 14 வயது சிறுமி காணாமல் போனமை தொடர்பில் பொதுமக்களிடம் அவசர கோரிக்கை
செய்திகள்

மட்டக்களப்பில் 14 வயது சிறுமி காணாமல் போனமை தொடர்பில் பொதுமக்களிடம் அவசர கோரிக்கை

August 12, 2026
Next Post
வாடிக்கையாளர்கள் விழிப்புடன் இருக்கவும்; சம்பத் வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

வாடிக்கையாளர்கள் விழிப்புடன் இருக்கவும்; சம்பத் வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.