மட்டக்களப்பு சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம் மாணவர்களால் 17ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று (18) உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.
நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டு முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தினர். நினைவேந்தல் நிகழ்வின் ஒரு பகுதியாக தீபம் ஏற்றப்பட்டதுடன், அமைதிப் பிரார்த்தனைகளும் இடம்பெற்றன.















மேலும், மாணவர் சமூகத்தின் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு “முள்ளிவாய்க்கால் கஞ்சி” வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வு, உயிரிழந்தோரின் நினைவுகளைப் போற்றும் வகையிலும், தமிழ் மக்களின் வரலாற்று நினைவுகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் நோக்கிலும் நடைபெற்றதாக மாணவர்கள் தெரிவித்தனர்.








