Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அரச பேருந்தில் மதுபோதையில் பணியாற்றிய நடத்துநர்; வவுனியாவில் பரபரப்பு!

அரச பேருந்தில் மதுபோதையில் பணியாற்றிய நடத்துநர்; வவுனியாவில் பரபரப்பு!

4 months ago
in செய்திகள்

முல்லைத்தீவிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான (இ.போ.ச) பேருந்தின் நடத்துநர் மதுபோதையில் கடமையாற்றிய குற்றச்சாட்டில், அவரிடமிருந்த பயணச்சீட்டுப் புத்தகம் மற்றும் பணம் என்பன இ.போ.ச அதிகாரிகளால் அதிரடியாகக் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

வவுனியா புதிய பேருந்து தரிப்பிடத்திலிருந்து காலை 6.30 மணிக்கு முல்லைத்தீவு நோக்கி தனது பயணத்தினை ஆரம்பித்த குறித்த இ.போ.ச பேருந்து, முல்லைத்தீவை சென்றடைந்துள்ளது. பின்னர், மீண்டும் முல்லைத்தீவு பேருந்து தரிப்பிடத்திலிருந்து காலை 10.30 மணியளவில் வவுனியாவை நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.

இப்பயணத்தின் போது, பேருந்தின் நடத்துநர் மதுபோதையில் இருப்பதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரனுக்கு தொலைபேசி ஊடாகப் பயணி ஒருவரால் முறைப்பாடு வழங்கப்பட்டது.

கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினையடுத்து உடனடியாகச் செயற்பட்ட தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய காரியாலய அதிகாரிகள் மற்றும் வவுனியா தனியார் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள், வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக குறித்த பேருந்தினை மறித்துச் சோதனை நடத்தினர்.

அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையின் போது, தான் மதுபானம் அருந்தியிருந்ததை நடத்துநர் ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த இ.போ.ச வவுனியா சாலை அதிகாரிகள், நடத்துநரிடமிருந்த பயணச்சீட்டுப் புத்தகம் மற்றும் பயணிகளிடமிருந்து வசூலிக்கப்பட்ட பணம் ஆகியவற்றை உடனடியாகத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அத்துடன், பேருந்தின் பயணத்தைத் தொடர்வதற்கும் பயணிகளின் நலனைக் கருத்திற் கொண்டும், உடனடியாகப் பிறிதொரு நடத்துநர் அந்தப் பேருந்தின் கடமைக்காகப் பணிக்கமர்த்தப்பட்டார். இச்சம்பவம் பேருந்து நிலையத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்

September 9, 2026
20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்
செய்திகள்

20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்

September 9, 2026
சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
செய்திகள்

சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

September 9, 2026
சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்
செய்திகள்

சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்

September 9, 2026
கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

September 9, 2026
கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்
செய்திகள்

கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்

September 9, 2026
Next Post
“ஜனாதிபதி வரப்போவதால் பிறகு வாருங்கள்”-மட்டு மாநகர சபை மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு

"ஜனாதிபதி வரப்போவதால் பிறகு வாருங்கள்"-மட்டு மாநகர சபை மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.