Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அர்ச்சுனா பதவி விலகுகிறார்- கௌசல்யா பதவியேற்கிறார்?

அர்ச்சுனா பதவி விலகுகிறார்- கௌசல்யா பதவியேற்கிறார்?

3 weeks ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், எதிர்காலத்தில் தாம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகினால், தனது இடத்திற்கு சட்டத்தரணி கௌசல்யா நரேந்திரன் பதவியேற்பார் என தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் இன்றைய (19) அமர்வில் உரையாற்றிய அவர், தன்னுடன் வருகை தந்திருந்த கௌசல்யா நரேந்திரன் தொடர்பில் ஏற்பட்ட சம்பவத்தை முன்வைத்து இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் வருகை தரும் விருந்தினர்களை அமர்த்த வேண்டிய இடம் மற்றும் அதற்கான நடைமுறைகள் குறித்து தீர்மானம் எடுப்பது நாடாளுமன்ற உறுப்பினர்களின் பொறுப்பாகும் என அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், தனது வலதுபுறத்தில் அமர்ந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தன்னுடன் வந்திருந்த சட்டத்தரணி கௌசல்யா நரேந்திரனை கேவலமான முறையில் அவமதித்ததாக அர்ச்சுனா இராமநாதன் குற்றஞ்சாட்டினார்.

மேலும், “அடுத்த மூன்று மாதங்களுக்குப் பிறகு நான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகும் போது, எனக்கு அடுத்ததாக கௌசல்யா நாடாளுமன்ற உறுப்பினராக வரவுள்ளார்” எனவும் அவர் தெரிவித்தார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை விட அதிக வாக்குகளை சட்டத்தரணி கௌசல்யா நரேந்திரன் பெற்றிருந்ததாகவும், இன்று நாடாளுமன்ற வாசிகசாலை பகுதியில் அவரை மிகவும் மோசமான முறையில் அவமதித்துச் சென்றதாகவும் அர்ச்சுனா இராமநாதன் சபையில் குறிப்பிட்டார்.

இந்த கருத்துக்கள் நாடாளுமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், அரசியல் வட்டாரங்களிலும் கவனத்தை ஈர்த்துள்ளன.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

June 6, 2026
பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை
செய்திகள்

பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை

June 6, 2026
பாணந்துறையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் கைது
செய்திகள்

பாணந்துறையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் கைது

June 6, 2026
மீகொடை விபத்து; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது
செய்திகள்

மீகொடை விபத்து; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது

June 6, 2026
புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!
செய்திகள்

புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!

June 6, 2026
சங்கீர்த்தனனின் விடுதலையை வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்
செய்திகள்

சங்கீர்த்தனனின் விடுதலையை வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்

June 6, 2026
Next Post
இலங்கையில் சட்டவிரோத தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒளிபரப்பு நிலையம் முற்றுகை

இலங்கையில் சட்டவிரோத தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒளிபரப்பு நிலையம் முற்றுகை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.