Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சம்மாந்துறையில் அதிரடிச் சுற்றிவளைப்பு; 33 லீற்றர் கசிப்புடன் பெண் உட்பட மூவர் போதைப்பொருட்களுடன் கைது!

சம்மாந்துறையில் அதிரடிச் சுற்றிவளைப்பு; 33 லீற்றர் கசிப்புடன் பெண் உட்பட மூவர் போதைப்பொருட்களுடன் கைது!

2 weeks ago
in செய்திகள்

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது 33 லீற்றர் கசிப்பு, ஐஸ் போதைப்பொருள் மற்றும் கேரளா கஞ்சா ஆகியவற்றுடன் பெண் ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்மாந்துறை புறநகர்ப் பகுதியான வீரமுனை 03 இல் நேற்று செவ்வாய்க்கிழமை (19) மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது, தன்வசம் 33 லீற்றர் (33,000 மில்லி லீற்றர்) கசிப்பினை வைத்திருந்த குற்றச்சாட்டில் 40 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி என். றிபாய்டீன் தலைமையிலான குழுவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், குறித்த பெண்ணின் வீடு சோதனையிடப்பட்டது. இதன்போது, விற்பனைக்காக 22 போத்தல்களில் சூட்சுமமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த கசிப்புத் தொகையே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மலையடி கிராமம் பகுதியைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், 10 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளைத் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதாகியுள்ளார். அவரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இது தவிர, மருதமுனை பகுதியைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க மற்றுமொரு நபர் கேரளா கஞ்சாவினைத் தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சந்தேக நபருக்கு எதிரான மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசாரின் நெறிப்படுத்தலில், சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரவின் ஆலோசனைக் கமைய, ஊழல் ஒழிப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி என். றிபாய்டீன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இச்சுற்றிவளைப்புகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கைதான மூன்று சந்தேகநபர்களுக்கும் எதிராகச் சம்மாந்துறை பொலிஸார் மேலதிக சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!
செய்திகள்

புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!

June 6, 2026
சங்கீர்த்தனனின் விடுதலையை வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்
செய்திகள்

சங்கீர்த்தனனின் விடுதலையை வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்

June 6, 2026
நீர்கொழும்பில் 477 கிலோ பீடி இலைகளுடன் இருவர் கடற்படையால் கைது!
செய்திகள்

நீர்கொழும்பில் 477 கிலோ பீடி இலைகளுடன் இருவர் கடற்படையால் கைது!

June 6, 2026
டொலர் உயர்வால் பதற்றம் வேண்டாம்; அரசின் முக்கிய விளக்கம்!
செய்திகள்

டொலர் உயர்வால் பதற்றம் வேண்டாம்; அரசின் முக்கிய விளக்கம்!

June 6, 2026
ஊடகவியலாளர்களுக்கு தொழில்சார் அங்கீகாரம்; புதிய சட்டமூலம் வெளியீடு!
செய்திகள்

ஊடகவியலாளர்களுக்கு தொழில்சார் அங்கீகாரம்; புதிய சட்டமூலம் வெளியீடு!

June 6, 2026
பொத்துவிலில் மோட்டார் சைக்கிள் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு
செய்திகள்

பொத்துவிலில் மோட்டார் சைக்கிள் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு

June 6, 2026
Next Post
முதல்வர் விஜய்க்கு எச்சரிக்கை-போராட தயங்க மாட்டோம்; யாழ் கடற்றொழிலாளர் சம்மேளனம்

முதல்வர் விஜய்க்கு எச்சரிக்கை-போராட தயங்க மாட்டோம்; யாழ் கடற்றொழிலாளர் சம்மேளனம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.