நாட்டின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட பரிசோதனைகளின் போது, பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட டீசல் வாகனங்களில் சுமார் 50 சதவீதமானவை அதிகளவு கரும்புகையை வெளியேற்றுவதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சோதனை செய்யப்பட்டுள்ளதுடன், 12 மாவட்டங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அதிக புகை வெளியேற்றும் வாகன உரிமையாளர்களுக்கு குறைபாடுகளை சரிசெய்ய 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட காலத்திற்குள் பிரச்சினைகளை சரிசெய்ய தவறும் வாகனங்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் என்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.








