“எனது பதவிக் காலத்தில் இந்த உலகம் பேரழிவை நோக்கிச் செல்வதை என்னால் வேடிக்கை பார்க்க முடியாது. அது ஒருபோதும் நடக்காது” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜனாதிபதி ட்ரம்ப், ஈரான் அரசுக்கு எதிராக அமெரிக்கா எடுத்து வரும் தற்போதைய இராணுவ மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள், அமெரிக்க மக்களிடையே மிகவும் வரவேற்பைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.
ஈரானின் அதிதீவிரவாதத் தலைமை ஒருபோதும் அணு ஆயுதத்தைப் பெற்றுக்கொள்வதற்கு அமெரிக்கா அனுமதிக்காது என்று குறிப்பிட்ட ட்ரம்ப், “இந்த இராணுவ நடவடிக்கை மக்களுக்குப் பிடித்திருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. எனது பதவிக் காலத்தில் இந்த உலகம் ஒரு பேரழிவை நோக்கிச் செல்வதை என்னால் ஒருபோதும் வேடிக்கை பார்க்க முடியாது. அது ஒருபோதும் நடக்காது” என்று மிகக் கடுமையான தொனியில் கூறினார்.








