நாட்டிற்குள் ஒரு கோப்பை பால் தேநீரின் (Milk Tea) விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
உள்நாட்டுச் சந்தையில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அண்மையில் அதிகரிக்கப்பட்டதையடுத்து, அதற்கு இணையாக இந்த விலை அதிகரிப்பு தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, இன்று (20) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த 5 ரூபாய் விலை அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என அச்சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.








