தமிழகத்தில் இலஞ்ச ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அரசு ஊழியர்கள் இலஞ்சம் கோரினால் பொதுமக்கள் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.
அரசு வெளியிட்ட தகவலின்படி, எந்தத் துறையிலும் பணம் கேட்டு தாமதம் ஏற்படுத்தப்படுகிற சூழ்நிலையில், அதனை புகைப்படம், வீடியோ அல்லது பிற ஆதாரங்களுடன் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் லஞ்ச நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்டதாக அரசு கூறுகிறது.
இதேவேளை, முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான புதிய நிர்வாகம் பதவியேற்ற பின்னர் நிர்வாக மாற்றங்கள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 16ஆம் திகதி அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டதையடுத்து, 9 அமைச்சர்களும் தங்களது அலுவலக பொறுப்புகளை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

முதலமைச்சர் தனது ஆரம்பகால உரையில், அடுத்த சில மாதங்களுக்குள் நிர்வாகத்தில் உள்ள இலஞ்ச முறைகள் பெரிதும் குறைக்கப்படும் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நிர்வாகத் துறைகளில் கண்காணிப்பு மற்றும் புகார் முறைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
மேலும், இலஞ்சம் தொடர்பான புகார்களை வழங்கும் பொதுமக்களுக்கு 1 லட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இதனால் பொதுமக்கள் அதிகளவில் புகார் அளிக்க முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு அலுவலகங்களில் நேர்மையான பணியாற்றலை உறுதி செய்யும் வகையில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதே அரசின் முக்கிய இலக்காக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








