மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மில்ல கலேவத்தை, பாலாறு பகுதியில் நேற்று முன்தினம் (22) இரவு கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் மில்ல கலேவத்தை, பிபில வீதி, மொனராகலை எனும் முகவரியைச் சேர்ந்த உலகநாதன் திலீப் மதுஷங்க எனும் 28 வயதுடைய இளைஞரே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இரு நபர்களுக்கு இடையே ஏற்பட்ட திடீர் வாய்த்தர்க்கம் முற்றியமையே இந்தத் துரதிர்ஷ்டவசமான கொலைச் சம்பவத்திற்குக் காரணம் என்பது ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
தாக்குதலில் படுகாயமடைந்த நபர் உடனடியாக மொனராகலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரும் மோதலின் போது பலத்த காயமடைந்த நிலையில், மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுப் பொலிஸ் காவலில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இக்கொடூரச் சம்பவம் குறித்து மொனராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








