Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
GovPay மூலம் அபராதம் செலுத்துவதை எளிதாக்கத் தவறும் பொலிஸாருக்கு எச்சரிக்கை!

GovPay மூலம் அபராதம் செலுத்துவதை எளிதாக்கத் தவறும் பொலிஸாருக்கு எச்சரிக்கை!

3 months ago
in செய்திகள்

GovPay அமைப்பு மூலம் சம்பவ இடத்திலேயே போக்குவரத்து அபராதங்களைச் செலுத்துவதற்கு வசதி செய்து தராத போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பொலிஸ் எச்சரித்துள்ளது.

வாகன சாரதிகள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் குறைக்கவும், போக்குவரத்து அபராதங்களைச் செலுத்துவதில் ஏற்படும் தாமதங்களால் பொதுமக்களின் நேரத்தையும் பொருளாதாரச் செலவுகளையும் சேமிக்கவும், 2025 ஏப்ரலில் GovPay கட்டண முறை அறிமுகப்படுத்தப்பட்டதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனதீர தெரிவித்தார்.

இந்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் அனைத்து ஒன்பது மாகாணங்களிலும் விழிப்புணர்வுத் திட்டமும், இந்த அமைப்பைச் செயல்படுத்தும் பணியும் நிறைவடைந்துள்ளன.

அதேவேளையில், இந்தச் சேவையை எளிதாக்கும் வகையில் லங்காபே மூலம் பொலிஸ் நிலையங்களுக்கு சுமார் 4,000 கைபேசிகள் வழங்கப்பட்டுள்ளன. தகுதியான போக்குவரத்து அபராதங்களில் சுமார் 12% தற்போது GovPay மூலம் செலுத்தப்பட்டு வருகின்றன.

இருப்பினும், சில போக்குவரத்து அதிகாரிகள், GovPay அமைப்பு மூலம் பணம் செலுத்துமாறு வாகன சாரதிகள் விடுக்கும் கோரிக்கைகளை நிராகரித்து, அதற்குப் பதிலாக அவர்களைக் பொலிஸ் நிலையங்களுக்கு வருமாறு அறிவுறுத்துவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இந்தப் முறைப்பாடுகளை நாங்கள் விசாரித்தபோது, ​​சில அதிகாரிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட சாதனங்களை எடுத்துச் செல்லத் தவறியதும், சிலரது திறமையின்மை மற்றும் மனப்பான்மை தொடர்பான பிரச்சினைகளும் தெரியவந்துள்ளது.

ஒரு அதிகாரி, தனக்கு அந்த அமைப்புமுறை பற்றித் தெரியாது என்றோ அல்லது அந்த வசதி பயன்பாட்டில் இல்லை என்று கூறினாலோ அது கடமைத் தவறு மற்றும் ஒழுங்கு மீறலாக அமையும்.GovPay மூலம் பணம் செலுத்த அனுமதிக்க மறுக்கும் அதிகாரிகள் மீது 070 4756600 என்ற ஹாட்லைன் மூலம் முறைப்பாடு அளிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 6, 2026
”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்
உலக செய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்

September 6, 2026
டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு
செய்திகள்

டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு

September 6, 2026
பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்
செய்திகள்

பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்

September 6, 2026
Next Post
கந்தளாய் வான்எல கிராமத்திற்குள் புகுந்த காட்டுயானை கொடூரத் தாக்குதல்; வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்ததில் விவசாயி படுகாயம்!

கந்தளாய் வான்எல கிராமத்திற்குள் புகுந்த காட்டுயானை கொடூரத் தாக்குதல்; வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்ததில் விவசாயி படுகாயம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.