இலங்கையின் பொருளாதார மீட்பு நடவடிக்கைகளுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், சர்வதேச நாணய நிதியம் (IMF) முக்கிய தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது.
இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் (EFF) கீழ், 5 ஆம் மற்றும் 6 ஆம் மதிப்பாய்வுகளுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது.
இந்த இரு மதிப்பாய்வுகளையும் விரிவாக ஆராய்வதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு நேற்று (மே 27) அவசரமாகக் கூடியது. இதன்போதே இலங்கையின் பொருளாதார முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்புதலின் மூலம், இலங்கைக்கு இந்த மே மாதத்திற்குள் 695 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி விடுவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் தற்போதைய பொருளாதார மீட்பு நடவடிக்கைகளைத் தொய்வின்றி முன்னெடுப்பதற்கும், நாட்டின் கடன் செயல்முறைகளுக்கு ஆதரவளிப்பதற்கும் இந்த நிதி முழுமையாகப் பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்டுகிறது.








