கொழும்பு மாவட்டம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளைப் போலவே மட்டக்களப்பிலும் இன்று திடீரென மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மின்சார அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின்விநியோகத்தை சமநிலைப்படுத்தும் நோக்கில் சில பகுதிகளில் மின்சாரம் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக மட்டக்களப்பு உள்ளிட்ட பல மாவட்டங்களில் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டதுடன், பொதுமக்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீண்டும் வழமையான மின்சார விநியோகத்தை வழங்கும் நோக்கில் அவசர சீரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் நிலைமை வழமைக்குத் திரும்பும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்களை அதிகாரிகள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர்.








