14 வயது சிறுமி ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், எரகம பகுதியைச் சேர்ந்த மௌலவி ஒருவர் நீதிமன்றில் சரணடைந்ததைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான அவர், சம்பவத்திற்குப் பின்னர் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பின்னர் சட்டத்தரணி ஒருவரின் ஊடாக அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்த அவர், ஜூன் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, பிரதான சந்தேகநபருக்கு உதவியதாகக் கூறப்படும் 21 வயதுடைய மற்றொரு மௌலவியும் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எரகம பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.








