எரிபொருள் விலை அதிகரித்துள்ள போதிலும், தற்போதைக்கு பஸ் கட்டணங்களை உயர்த்துவதற்கான தீர்மானம் எடுக்கப்படவில்லை என்று பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
தற்போது நடைமுறையில் உள்ள பஸ் கட்டண திருத்த முறையின் அடிப்படையில் மட்டுமே கட்டண மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், எரிபொருள் விலை மாற்றங்களால் பஸ் கட்டணங்களை மறுசீரமைக்க வேண்டுமெனில், அதற்கான மாற்றம் குறைந்தது 4 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.








