உலகளாவிய காலநிலை மாற்றங்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் எல் நினோ (El Niño) நிகழ்வின் அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளதாக ஐரோப்பிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்படும் வேளையில் வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு, உலக நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஆய்வு மையத்தின் தகவலின்படி, பசிபிக் பெருங்கடல் பகுதியில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரித்துள்ளதுடன், அப்பகுதியில் காற்றின் இயக்கத்திலும் மாற்றங்கள் பதிவாகியுள்ளன. இந்த நிலைமைகள் எல் நினோ நிகழ்வு உருவாகி வருவதற்கான முக்கிய அறிகுறிகளாகக் கருதப்படுகின்றன.
எல் நினோ நிகழ்வு உலகின் பல பகுதிகளில் கடுமையான வெப்பநிலை உயர்வு, வறட்சி, அதிக மழைப்பொழிவு மற்றும் பிற காலநிலை மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பதால், இதன் முன்னேற்றம் குறித்து உலக வானிலை அமைப்புகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.







