எல் நிமேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீட்டர் அளவிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு சுமார் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு சுமார் 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைத்துக் கொள்வதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.னோ தாக்கம் ஆரம்பம்; உலகளாவிய காலநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கை!
உலகளாவிய காலநிலை மாற்றங்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் எல் நினோ (El Niño) நிகழ்வின் அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளதாக ஐரோப்பிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்படும் வேளையில் வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு, உலக நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஆய்வு மையத்தின் தகவலின்படி, பசிபிக் பெருங்கடல் பகுதியில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரித்துள்ளதுடன், அப்பகுதியில் காற்றின் இயக்கத்திலும் மாற்றங்கள் பதிவாகியுள்ளன. இந்த நிலைமைகள் எல் நினோ நிகழ்வு உருவாகி வருவதற்கான முக்கிய அறிகுறிகளாகக் கருதப்படுகின்றன.
எல் நினோ நிகழ்வு உலகின் பல பகுதிகளில் கடுமையான வெப்பநிலை உயர்வு, வறட்சி, அதிக மழைப்பொழிவு மற்றும் பிற காலநிலை மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பதால், இதன் முன்னேற்றம் குறித்து உலக வானிலை அமைப்புகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.








