Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பெற்றோரின் சொத்துக்களை பெற்றுக்கொண்டு அவர்களை கைவிடும் பிள்ளைகளின் சொத்துக்கள் அரசுடமையாக்கும் சட்டம்

பெற்றோரின் சொத்துக்களை பெற்றுக்கொண்டு அவர்களை கைவிடும் பிள்ளைகளின் சொத்துக்கள் அரசுடமையாக்கும் சட்டம்

2 days ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பெற்றோருக்குச் சொந்தமான சொத்துக்களைத் தங்கள் பெயருக்கு மாற்றிய பின்னர், அந்தப் பெற்றோர்களைக் கவனிக்காமல் முதியோர் இல்லங்களில் சேர்க்கும் பிள்ளைகளின் சொத்துக்களை அரசுடைமையாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தேசிய செயலகத்தின் பணிப்பாளர் சதுர மிகிந்தும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்ட பின்னர், அந்தப் பெற்றோர்களைப் பராமரிக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்குப் பொருத்தமான சட்டத் திருத்தங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்தத் திருத்தங்கள் தற்போது சட்ட வரைபுத் திணைக்களத்திற்கு (Legal Draftsman’s Department) அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சில பிள்ளைகள் தங்களுக்குச் சொந்தமான பெற்றோரின் சொத்துக்களை மிகவும் சூட்சுமமான முறையில் தங்கள் பெயர்களுக்கு எழுதிக் கொண்டு, பின்னர் அவர்களை முதியோர் இல்லங்களுக்கு அனுப்புவதாகவும், அவர்களைக் கைவிடுவதாகவும் கிடைத்துள்ள முறைப்பாடுகளைக் கருத்திட்டே இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சட்டங்கள் வலுப்படுத்தப்பட்டதன் பின்னர், பெற்றோர்களைக் கவனிக்காமல் இருப்பதற்கு பிள்ளைகளுக்கு எவ்வித வாய்ப்பும் கிடைக்காது என பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெற்றோர்களின் பாதுகாப்பு, அவர்களின் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் தொடர்பாக அவசர வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Tags: BattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மாகாண சபைத் தேர்தல் நடத்தினால் 8 மாகாணங்களில் பொதுஜன பெரமுன ஆட்சியமைக்கும்; சாந்த பண்டார!
செய்திகள்

மாகாண சபைத் தேர்தல் நடத்தினால் 8 மாகாணங்களில் பொதுஜன பெரமுன ஆட்சியமைக்கும்; சாந்த பண்டார!

June 9, 2026
நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கும் வரை ஓயமாட்டோம்; சத்தாதிஸ்ஸ தேரர்!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கும் வரை ஓயமாட்டோம்; சத்தாதிஸ்ஸ தேரர்!

June 9, 2026
அடுத்த இரு வாரங்களில் ஈரானுக்கு எதிராக முழுமையான வெற்றி; ட்ரம்ப் அறிவிப்பு
உலக செய்திகள்

அடுத்த இரு வாரங்களில் ஈரானுக்கு எதிராக முழுமையான வெற்றி; ட்ரம்ப் அறிவிப்பு

June 9, 2026
பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு எதிராக புதிய சட்டம்; அரசாங்கம் கவனம்!
செய்திகள்

பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு எதிராக புதிய சட்டம்; அரசாங்கம் கவனம்!

June 9, 2026
திறைசேரி டொலர் காணாமல் போன விவகாரம்; மத்திய வங்கிக்கு ஒரு வார அவகாசம்!
செய்திகள்

திறைசேரி டொலர் காணாமல் போன விவகாரம்; மத்திய வங்கிக்கு ஒரு வார அவகாசம்!

June 9, 2026
ஈஸ்டர் தாக்குதல் உண்மை வெளிவராமல் தடுக்க உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, திலித் ஜயவீர முயற்சி
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் உண்மை வெளிவராமல் தடுக்க உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, திலித் ஜயவீர முயற்சி

June 9, 2026
Next Post
ஒரு பாடலுக்கு பயப்படுவது வேடிக்கையான விடயம்; சாணக்கியன்

ஒரு பாடலுக்கு பயப்படுவது வேடிக்கையான விடயம்; சாணக்கியன்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.