அக்கரப்பத்தனைபொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்றாசி நகரத்தில் உணவகம் ஒன்றில் ஐஸ் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த இரண்டு இளைஞர்களை பொலிஸ் அதிகாரிகளால் நேற்று (07) இரவு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அக்கரப்பத்தனை பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இணைந்து தீடிரென குறித்த உணவகத்தினை முற்றுகை இட்டு பரிசோதனையை மேற்கொண்டபோது ஐஸ் போதையுடன் இருவரையும் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 430 மில்லிகிராம் மற்றும் 110 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் அடங்கிய இரண்டு பொதிகள் மீட்கப்பட்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்தனர் .
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 33 மற்றும் 35 வயதுடையவர்கள் எனவும் சந்தேக நபர்கள் இருவரும் அக்கரப்பத்தனை மற்றும் டிக்கோயா பகுதிகளை சேர்ந்தவர்கள் என விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.








