சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி அதிகளவான பயணிகளுடன் பேருந்தை இயக்கிய நபர் ஒருவரை ஹட்டன் போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி, சந்தேகநபர் ஹட்டன் – டிக்கோயா சலங்கந்த பகுதியில் இருந்து தினமும் செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி பேருந்தை செலுத்தி வந்துள்ளார். பின்னர் பயணத்தின் இடைப்பட்ட பகுதியில் மற்றொரு சாரதியிடம் பேருந்தை ஒப்படைத்து வந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய பேருந்து, ஹட்டன் – சலங்கந்த வழித்தடத்தில் செங்குத்தான ஏற்றங்களும் ஆபத்தான வளைவுகளும் நிறைந்த பாதையில் சேவையில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பாக பேருந்தின் உரிமையாளருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.








