இலங்கைக்குள் எவ்வித பொருட்களும் கொண்டுவரப்படாத நிலையில், இறக்குமதி என்ற போர்வையில் பல மில்லியன் அமெரிக்க டாலர்களைச் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி முன்னெடுக்கப்பட்ட பாரிய வெளிநாட்டு நாணய மோசடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பொருட்களை இறக்குமதி செய்வதாகக் காண்பித்து, போலியான ஆவணங்கள் மூலம் இந்த மில்லியன் கணக்கிலான டாலர்கள் வெளிநாடுகளுக்குப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளமை விசாரணைகளில் உறுதியாகியுள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் வகையில் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ள இந்த நிதி மோசடியின் பின்னணியில் உள்ள நபர்களைக் கைது செய்ய, புலனாய்வுப் பிரிவினரும் நிதிக்குற்ற விசாரணை அதிகாரிகளும் இணைந்து விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.








