கொழும்பில் காலி முகத்திடலில் 5,000 கலைஞர்கள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்வு உலக சாதனையாக பதியப்பட்டுள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு இன்று 2026 ஜூன் 14-ஆம் திகதி காலை 6 மணிக்குக் கொழும்பு காலி முகத்திடலில் நடைபெற்றது.
இந்தியாவைச் சேர்ந்த ‘சங்கமம் குளோபல் அகடமி’ மற்றும் இலங்கையின் ‘சங்கமிழ் லியா ஹொலிடேஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த மாபெரும் உலக சாதனை நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.
உலகின் மிகப்பெரிய பரதநாட்டியப் பயிற்சிக்கான கின்னஸ் உலகச் சாதனை முயற்சியாக இதனை கின்னஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
உலக அரங்கில் இலங்கையின் கலாசாரப் பெருமையை உயர்த்தவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ‘சங்கமம் 2026’ கலாசார நிகழ்வு மற்றும் கின்னஸ் உலக சாதனை முயற்சி குறித்து பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் உத்தியோகபூர்வமாக கடந்தவாரம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.








