உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து ஆதாரங்கள் இருப்பதாகக் கூறுபவர்கள், வெறுமனே ஊடகங்களுக்கு கருத்துக்களை வழங்கி பகிரங்கக் குற்றச்சாட்டுகளை சுமத்துவதை விடுத்து, தங்களது சான்றுகளை நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்க வேண்டும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
மத்துகம மற்றும் அகலவத்தை பகுதிகளில் ‘ஐ-ரோட்’ திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட வீதி அபிவிருத்தித் திட்டங்களைத் நேற்று திறந்து வைத்த பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசிய போதே அமைச்சர் இதனைத் குறிப்பிட்டார்.
முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சலே தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறித்து குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள், தங்களின் ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, சட்டப்பூர்வ வழிகளின் மூலம் நீதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.








