அத்தனகல்லை கரஸ்னாகல நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர பராமரிப்புப் பணிகளின் காரணமாக, கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் 19 மணிநேர நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று (16) காலை 8.00 மணி முதல் நாளை (17) அதிகாலை 3.00 மணி வரை நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது.
இந்த நீர் வெட்டு, கம்பஹா மாநகர சபை, கம்பஹா பிரதேச சபை மற்றும் மஹர பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளைப் பாதிக்கவுள்ளது.
அத்துடன், வெலிவேரிய, பெலும்மஹர, ரதுபஸ்வல, மினுவாங்கொடை, அஸ்கிரிய, உடுகம்பொல, ஓபாத மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.
மேலும், ரன்பொகுணுகம வீட்டுத்திட்டம், ஊராபொல, அத்தனகல்ல, படலீய, வத்துபிட்டிவல, நிட்டம்புவ, வேயங்கொடை, கலகெடிஹேன, திஹாரிய, நைவல மற்றும் அதனை அண்மித்த பகுதிகளுக்கும் இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
எனவே, பொதுமக்கள் தேவையான அளவு நீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளுமாறும் சபை அறிவுறுத்தியுள்ளது.








