Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு கல்லடியில் ஆலயத்தில் இரு குழுக்களுக்கிடையே மோதல்; தடுக்கச்சென்ற முதியவரின் வீட்டை சேதப்படுத்திய நபர்கள்

மட்டு கல்லடியில் ஆலயத்தில் இரு குழுக்களுக்கிடையே மோதல்; தடுக்கச்சென்ற முதியவரின் வீட்டை சேதப்படுத்திய நபர்கள்

1 hour ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு நொச்சிமுனை பகுதியில் ஆலயம் ஒன்றில் இடம்பெற்று வரும் திருவிழாவில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலை தடுத்த வயோதிபரின் பூட்டியிருந்த வீட்டுக்கு மோட்டார் சைக்கிள் சென்ற இருவர் வீட்டை உடைத்து யன்னல், அலமாரி கண்ணாடிகள் மற்றும் பொருட்களை அடித்து நெருக்கி சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் நேற்று திங்கட்கிழமை(15) பகலில் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நொச்சிமுனை பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் இரு குழுக்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது அதன் அங்கிருந்த முதியவர் ஆலயத்தில் சண்டை பிடிக்க கூடாது என தெரிவித்து மோதலை தடுத்த போது அவர் கீழே வீழ்ந்து தலையில் காயம் ஏற்பட்டது.

இந்த நிலையில் நொச்சிமுனை இசை நடனக் கல்லூரி வீதியில் உள்ள குறித்த முதியவரின் வீட்டிற்கு சம்பவ தினமான நேற்று திங்கட்கிழமை (15) பகல் 12.00 மணியளவில் குறித்த வீட்டின் உரிமையாளரான முதியவர் அவரது மனைவி ஆகியோர் வீட்டை பூட்டி விட்டு சமுர்த்தி காரியாலயத்துக்கு சென்றுள்ளனர்.

இதன் போது அங்கு இருவர் கூரிய ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ள நிலையில் வீடு பூட்டி இருந்ததையடுத்து மதில் மேலால் குதித்து வீட்டின் கதவை உடைத்து யன்னல் அலுமாரிகளின் கண்ணாடிகளை உடைத்து வீட்டை சேதப்படுத்தி விட்டு தப்பி ஓடியுள்ளனர்.

இதையடுத்து வீடு திரும்பியவர்கள் வீடு உடைத்து சேதப்படுத்தி உள்ளதை கண்டு பொலிசாருக்கு அறிவித்ததையடுத்து பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன் வீதிகளில் உள்ள வீடுகளில் பொருத்தியிருந்த சிசிரிவி கமராக்களில் பதியப்பட்டிருந்த காட்சிகள் மூலம் குறித்த நபர்களை அடையாளம் கண்டு கொண்டுள்ளதாகவும் அவர்கள் தலைமறைவாகி உள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை இந்த நபர்கள் அந்த பகுதியில் கசிப்பு மற்றும் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருபவர்கள் எனவும் இவர்களை பல தடவை பொலிசார் கைது செய்து பிணையில் வெளிவந்துள்ளவர்கள் எனவும் இவர்கள் தொடர்ந்து இந்த பகுதியில் வாள்களுடன் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவதாகவும் இதனால் மக்கள் அச்சமடைந்து உள்ளதாகவும் இது தொடர்பாக பொலிசாருக்கு பல முறைப்பாடுகள் தெரிவித்தும் இவர்களுக்கு எதிராக பொலிசார் நடவடிக்கை எடுக்கவில்லை என அந்த பகுதி மக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நளிந்த ஜயதிஸ்ஸவின் வாழைக்குலை மதில் பாய்ந்த கதையில் கோட்டா?
அரசியல்

நளிந்த ஜயதிஸ்ஸவின் வாழைக்குலை மதில் பாய்ந்த கதையில் கோட்டா?

June 16, 2026
செல்வம் அடைக்கலநாதன் ரெலோவின் தலைமையாகயிருக்க தகுதியில்லாதவர்; மூத்த உறுப்பினர் ஏகனாதன் வியஜபவானந்தா
அரசியல்

செல்வம் அடைக்கலநாதன் ரெலோவின் தலைமையாகயிருக்க தகுதியில்லாதவர்; மூத்த உறுப்பினர் ஏகனாதன் வியஜபவானந்தா

June 16, 2026
வடக்கு மற்றும் கிழக்கில் மீட்கப்பட்ட தங்கப் பொருட்கள் தொடர்பான எடையிடல் பணிகள் நிறைவு
செய்திகள்

வடக்கு மற்றும் கிழக்கில் மீட்கப்பட்ட தங்கப் பொருட்கள் தொடர்பான எடையிடல் பணிகள் நிறைவு

June 16, 2026
இந்த ஆண்டு 120,000 பேருக்கு அரச சேவையில் வேலைவாய்ப்பு; அமைச்சர் சந்தன அபேரத்ன
செய்திகள்

இந்த ஆண்டு 120,000 பேருக்கு அரச சேவையில் வேலைவாய்ப்பு; அமைச்சர் சந்தன அபேரத்ன

June 16, 2026
வவுனியா – செட்டிக்குளம் வழித்தடத்தில் ‘சிசு செரிய’ பஸ் சேவை ஆரம்பம்
செய்திகள்

வவுனியா – செட்டிக்குளம் வழித்தடத்தில் ‘சிசு செரிய’ பஸ் சேவை ஆரம்பம்

June 16, 2026
ஏறாவூரில் சிறுவர்களால் கடத்தி சென்று சிறுவன் தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி!
செய்திகள்

ஏறாவூரில் சிறுவர்களால் கடத்தி சென்று சிறுவன் தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி!

June 16, 2026
Next Post
வடக்கு மற்றும் கிழக்கில் மீட்கப்பட்ட தங்கப் பொருட்கள் தொடர்பான எடையிடல் பணிகள் நிறைவு

வடக்கு மற்றும் கிழக்கில் மீட்கப்பட்ட தங்கப் பொருட்கள் தொடர்பான எடையிடல் பணிகள் நிறைவு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.