மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரான் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோனுடன் நடைபெற்ற இரவு விருந்தின்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதாக ஆக்சியோஸ் செய்தி வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து, அமெரிக்க அதிகாரி ஒருவர் ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்திடம் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஜி7 உச்சிமாநாட்டைத் தொடர்ந்து வெர்சாய் அரண்மனையில் மெக்ரோனுடன் நடைபெற்ற இரவு உணவு நிகழ்வின் போது, ஒப்பந்தத்தின் பிரதியில் டிரம்ப் தனிப்பட்ட முறையில் கையெழுத்திட்டதாக வெளியான செய்தி குறித்து கேட்கப்பட்டபோது, “அது கையெழுத்திடப்பட்டதை உறுதிப்படுத்த முடியும்” என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், அமெரிக்காவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் மின்னணு முறையில் கையொப்பமிடப்பட்டுள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயியும் உறுதிப்படுத்தியுள்ளார்.








