வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்திக்கூட்டம் இன்றைய தினம் (18) வியாழக்கிழமை தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜா தலைமையில்
இடம்பெற்றது.
இதன்போது தெல்லிப்பழை வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சை பிரிவு மற்றும் வைத்தியசாலை ஆகியவற்றை மத்திய அரசின் கீழ் கொண்டு வந்து அதனை மேம்படுத்தி மக்களுக்கு சேவை வழங்குவது தொடர்பாக பிரஸ்தாபிக்கப்பட்டது.
அத்துடன் தையிட்டி விகாரை, போக்குவரத்து விடயங்கள், காணிகளை விடுவித்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இதன்போது தெல்லிப்பழை வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சை பிரிவு மற்றும் வைத்தியசாலை ஆகியவற்றை மத்திய அரசின் கீழ் கொண்டுவருவது தொடர்பான விடயத்தின்போது, பாராளுமன்ற உறுப்பினர்களான அர்ச்சுனா இராமநாதன், கஜேந்திரகுமார் பென்னம்பலம் ஆகியோருக்கு இடையில் கடுமையான வார்த்தை மோல் ஏற்பட்டது.
இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழலும் நிலவியது.
வலி.வடக்கு பிரதேச செயலாளர், வலி.வடக்கு பிரதேச சபை தவிசாளர், திணைக்கள அதிகாரிகள், பொலிஸார் என பலர் இதில் கலந்து கொண்டனர்.








