குறித்த பாடசாலையின் தரம் 11 இல் கல்வி கற்கும் மாணவிகள் குழுவொன்று நேற்று (18) விஞ்ஞான ஆய்வுகூடத்தில் இரசாயனப் பொருட்கள் தொடர்பான பரிசோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, இரசாயனப் பொருட்களை அளவிடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட பீக்கர் ஒன்று எதிர்பாராத விதமாக திடீரென வெடித்துச் சிதறியுள்ளது.
இதனால் அங்கிருந்த நான்கு மாணவிகளும், அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த ஆசிரியையும் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








