இலங்கையில் நூறு ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முதலாக கதிர்காம ஆலையத்தின் மூலஸ்தானத்தில் வைக்கப்பட்டு வேலும், யாழ் செல்வச்சந்நிதி ஆலய மூலஸ்தானத்தில் வைக்கப்பட்ட வேலுமாக இரு வேல்களுடன் சங்கரன் அடிகளுடன் கதிர்காமத்தைச் சேர்ந்த சிங்கள இனத்தையுடைய அருணன் என்பவர் உட்பட இருவர்களும் செல்வச்சந்நிதி ஆலையத்தில் இருந்து கதிர்காமத்திற்கு இரு வேல்களுடன் பாதை யாத்திரையை ஆரம்பித்து மட்டு மாமாங்கத்தை நேற்று முன்தினம் புதன்கிழமை(17) வந்தடைந்துள்ளனர்.
கடந்த 15 வருடமாக செல்வச்சந்நிதி முருகன் ஆலையத்தில் இருந்து கதிர்காமத்துக்கான பாதை யாத்திரையை மேற்கொண்டுவருவதுடன் கடந்த 9 வருடங்களாக ஊகந்தை முருகன் ஆலையத்தில் இருந்து கதிர்காமத்துக்கான காட்டுவழி பாதையை முதல் முதலாக ஆரம்பித்து வருகின்ற பாக்கியம் கிடைத்துள்ளதாகவும் இந்த வருடம் இரு ஆலய வேல்களுடன் காட்டுவழிபாதை திறப்பின் போது முதல் முதல் கிடைக்கும் என நம்புவதாக சங்கரண் அடிகளார் தெரிவித்தார்.
அதேவேளை கடந்த வருடம் செல்வச்சந்நி ஆலயத்தில் இருந்து பாதையாத்திரை ஆரம்பித்த ஒரு குழுவின் தலைவராக செயற்பட்டவர் கதிர்காமத்தில் பக்தர்களின் தங்க ஆபரணங்கள், பணம் ஆகியவற்றை திருடிய போது பொலிசாரால் கைது செய்யப்பட்டு வழக்கு இடம் பெற்று வருகின்றதுடன் அவர் செல்வ சந்நிதியில் 5 தடவைகள் திருட்டில் ஈடுபட்டபோது ஆலய நிர்வாகம் பிடித்துள்னர் அதேவேளை மதுபானங்களையும் மீட்டனர்.
இவ்வாறு முறைகேடாகவும் தீட்டில் ஈடுபட்டவர்களும் பாதை யாத்திரை குழுவில் ஈடுபடுவது சைவத்துக்கும் தமிழுக்கும் இழுக்கு எனவே பக்த அடியார்களே உண்மையாக பக்த அடியார்களுக்கு அன்னதானம் வழங்கவும்.
அதேவேளை இந்த திருட்டு செயற்பாட்டினால் அந்த பாதை யாத்திரை குழுவினை செல்வ சந்நிதியான் ஆலயத்திற்கு ஆலய நிர்வாகம் அனுமதிக்கவில்லை என்பதுடன் செல்வ சந்நிதி ஆலய மூலஸ்தானத்தில் வைக்கப்பட்ட முருகவேல் ஆலைய குருக்கள் சுரேஸ்குமார் குருக்கள் மற்றும் சாரங்கள் ஐயாவின் வழிநடத்தலில் என்னிடம் வழங்கப்பட்டது. அதேவேளை கதிர்காம ஆலயத்தில் மூலஸ்தானத்தில் இருந்து சுதுமாத்தையா , கப்புறாளை ஆகிய இருவரால் அருணன் என்றவரிடம் வழங்கப்பட்டு இந்த இரண்டு ஆலய வேல்களுடன் நாங்கள் இருவரும் செல்வ சந்நிதியில் இருந்து பாதையாத்திரை ஆரம்பித்துள்ளோம் எனவே பக்தர்கள் இந்த இரு வேல்களையும் தரிசிக்கவும் என சங்கரன் அடிகளார் தெரிவித்தார்..








