பிலிப்பைன்ஸின் மத்திய பகுதியில் உள்ள தக்லோபன் நகரில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் இன்று (22) நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
வழக்கம்போல் பாடசாலை செயல்பட்டுக் கொண்டிருந்த நிலையில், இரண்டு மர்ம நபர்கள் திடீரென பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதலில் மூன்று மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மேலும் ஐந்து மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவத்தையடுத்து விரைந்து செயல்பட்ட பொலிஸார் இரண்டு பேரை கைது செய்து விசாரணைக்கு எடுத்துள்ளனர். அவர்களில் ஒருவர் குறித்த பாடசாலையின் முன்னாள் மாணவர் என ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தாக்குதலுக்கான காரணம் இதுவரை தெளிவாக தெரியாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அந்த பகுதியை சுற்றி பலத்த பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.








