Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இந்திய கடவுச்சீட்டுடன் இலங்கை பெண் சென்னையில் கைது!

இந்திய கடவுச்சீட்டுடன் இலங்கை பெண் சென்னையில் கைது!

2 months ago
in செய்திகள்

இந்திய கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கைக்கு வர முயன்ற இலங்கைப் பெண்ணொருவர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் (23) இலங்கை நோக்கி பயணிக்க முயன்ற பெண்ணின் கடவுச்சீட்டை வெளிநாட்டவர் பதிவு மண்டல அதிகாரிகள் பரிசோதித்தபோது சந்தேகத்திற்கிடமான தகவல்கள் கண்டறியப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

விசாரணைகளில், குறித்த பெண் கடந்த 2001 ஆம் ஆண்டு இலங்கை கடவுச்சீட்டின் மூலம் இந்தியா வந்திருந்தது தெரியவந்துள்ளது. பின்னர் இந்திய குடியுரிமை பெற்றவர் போன்று இந்திய கடவுச்சீட்டை பயன்படுத்தி மீண்டும் இலங்கைக்கு செல்ல முயன்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

மேலதிக விசாரணைகளில், கைது செய்யப்பட்டவர் இலங்கையைச் சேர்ந்த 58 வயதுடைய மெரினா ஆனி என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் 2001 ஆம் ஆண்டு இந்தியா வந்த பின்னர் குவைத்துக்கு சென்று, 2003 ஆம் ஆண்டு இந்தியாவின் விருதுநகர் பகுதியைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டு மீண்டும் இந்தியாவில் குடியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்றவர் போன்று ஆதார் அட்டை, பான் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களைப் பெற்று, தனது இலங்கை அடையாளத்தை மறைத்து இந்திய கடவுச்சீட்டையும் பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, மெரினா ஆனி கைது செய்யப்பட்டதுடன், அவரிடமிருந்த இந்திய ஆவணங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அதிகபட்ச சில்லறை விலையை மீறி அரிசி விற்பனை; இரண்டு கடைகளுக்கு ரூ.3 இலட்சம் அபராதம்!
செய்திகள்

அதிகபட்ச சில்லறை விலையை மீறி அரிசி விற்பனை; இரண்டு கடைகளுக்கு ரூ.3 இலட்சம் அபராதம்!

August 9, 2026
சிறு கடனாளிகளுக்கு கடும் சட்டம்; பெரும் கடனாளிகளுக்கு ஏன் சலுகை? – பாராளுமன்றத்தில் சாணக்கியன் கேள்வி
செய்திகள்

சிறு கடனாளிகளுக்கு கடும் சட்டம்; பெரும் கடனாளிகளுக்கு ஏன் சலுகை? – பாராளுமன்றத்தில் சாணக்கியன் கேள்வி

August 9, 2026
தமிழர் அரசியல் பேரவையில் இணையுமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு ரவூப் ஹக்கீம் அழைப்பு
அரசியல்

தமிழர் அரசியல் பேரவையில் இணையுமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு ரவூப் ஹக்கீம் அழைப்பு

August 9, 2026
ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஓமான் ஒப்பந்தம் மட்டும் போதாது; ஈரான்
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஓமான் ஒப்பந்தம் மட்டும் போதாது; ஈரான்

August 9, 2026
சாவகச்சேரி பிரதான சாலையில் அமைந்துள்ள வேப்பமரங்களை வெட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை
செய்திகள்

சாவகச்சேரி பிரதான சாலையில் அமைந்துள்ள வேப்பமரங்களை வெட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

August 9, 2026
போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் சுதந்திரக்கட்சியின் தொகுதி தலைவர் கைது
செய்திகள்

போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் சுதந்திரக்கட்சியின் தொகுதி தலைவர் கைது

August 9, 2026
Next Post
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப 15 முதல் 20 ஆண்டுகள் தேவை; பிரதி அமைச்சர் சதுர அபேசிங்க

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப 15 முதல் 20 ஆண்டுகள் தேவை; பிரதி அமைச்சர் சதுர அபேசிங்க

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.