கலேவெல, தென்னகோன்புர துபார குளப் பகுதியில் அமைந்துள்ள விவசாயக் கிணறு ஒன்றில் தவறி விழுந்ததில் தாயும் அவரது 10 வயது மகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் தகவலின்படி, மீன்பிடிப்பதற்காக துபார குளத்திற்குச் சென்ற மகன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், அவரைத் தேடி தாய் தனது மகளுடன் குளப் பகுதிக்குச் சென்றுள்ளார்.
அந்த வேளையில், குளத்திற்கு அருகில் வெட்டப்பட்டிருந்த விவசாயக் கிணறு ஒன்றில் இருவரும் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த துயரச் சம்பவத்தில் தலகிரியாகம பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய பெண்ணும், அவரது 10 வயதுடைய மகளும் உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கலேவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








