அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், வெனிசுவேலா முழுவதும் கடந்த 1 ஆம் திகதி மாலை 6 மணி முதல் ஏழு நாட்கள் தேசிய துக்கம் அனுஷ்டிக்கப்படுவதாக அந்நாட்டு இடைக்கால அரசு அறிவித்துள்ளது.
கடந்த ஜூன் 24 ஆம் திகதி வெறும் 39 விநாடிகள் இடைவெளியில் ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள், ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் இருந்த வெனிசுவேலாவில் பாரிய சேதங்களை ஏற்படுத்தியுள்ளன.
அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, இதுவரை 2,295 பேர் உயிரிழந்துள்ளதுடன், 11,000-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். மேலும், பல்லாயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களைத் தேடும் மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாடு முழுவதும் தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளதுடன், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக வெனிசுவேலா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.








