Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நெடுந்தீவில் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு அவசியம்; ஈ.பி.டி.பி. வலியுறுத்தல்!

நெடுந்தீவில் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு அவசியம்; ஈ.பி.டி.பி. வலியுறுத்தல்!

2 months ago
in செய்திகள்

நெடுந்தீவில் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் மக்கள் தொடர்ந்து பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருவதால், அங்கு தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்கப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.) வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாகக் கருத்து வெளியிட்டுள்ள கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம், நெடுந்தீவு மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் 2010ஆம் ஆண்டு அப்போதைய அமைச்சரான டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியில் ஆர்.ஓ. (RO) தொழில்நுட்பத்தை பயன்படுத்திய கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

அந்தத் திட்டத்தின் மூலம் தற்போது நாளொன்றுக்கு 80,000 லீற்றருக்கும் அதிகமான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உற்பத்தி செய்யப்பட்டு சுமார் 900 குடும்பங்களுக்கு விநியோகிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், நெடுந்தீவில் தற்போது 1,400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதுடன், அரச திணைக்களங்கள், பாடசாலைகள், ஆலயங்கள் உள்ளிட்ட பொது நிறுவனங்களின் தேவைகளையும் கருத்தில் கொண்டு, தற்போதைய திட்டத்தின் கொள்ளளவை அதிகரிப்பது அவசியமாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால், நெடுந்தீவு மக்களின் அத்தியாவசிய குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் விரைவுபடுத்த வேண்டும் என்றும் ஈ.பி.டி.பி. கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, 2010ஆம் ஆண்டு இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அதிகளவான மழைநீர் சேகரிப்பு தாங்கிகளும், 300 குடும்பங்களுக்கான மலசலக் கூடங்களும் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கிரானில் சிறுவர் உரிமைகளை வலியுறுத்தி அமைதிப் பேரணி!
செய்திகள்

கிரானில் சிறுவர் உரிமைகளை வலியுறுத்தி அமைதிப் பேரணி!

August 18, 2026
22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
அரசியல்

22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

August 18, 2026
விரைவில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகள்; அரசாங்கம் திட்டம்!
செய்திகள்

விரைவில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகள்; அரசாங்கம் திட்டம்!

August 18, 2026
கல்முனை சீருடை விவகாரம்; முஸ்லிம் தலைமைகளின் கருத்தை ஏற்றுக்கொண்ட சுகாதார அமைச்சர்
செய்திகள்

கல்முனை சீருடை விவகாரம்; முஸ்லிம் தலைமைகளின் கருத்தை ஏற்றுக்கொண்ட சுகாதார அமைச்சர்

August 18, 2026
யாழ் செம்மணி விவகாரம்; நீதியின் ஓலம்- நீதிக்கும் உரிமைக்கான குரல் போராட்டத்தின் இறுதி நாள் போராட்டம்
செய்திகள்

யாழ் செம்மணி விவகாரம்; நீதியின் ஓலம்- நீதிக்கும் உரிமைக்கான குரல் போராட்டத்தின் இறுதி நாள் போராட்டம்

August 18, 2026
கெஹெலிய ரம்புக்வெல்ல மீண்டும் கைது
செய்திகள்

கெஹெலிய ரம்புக்வெல்ல மீண்டும் கைது

August 18, 2026
Next Post
பிரைட் ரைஸ், கொத்து ரொட்டி விலைகள் குறைப்பு!

பிரைட் ரைஸ், கொத்து ரொட்டி விலைகள் குறைப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.