காலிமுகத்திடலில் அமைந்திருந்த இராணுவத் தலைமையகக் காணியை ஷங்ரிலா ஹோட்டலுக்கு விற்பனை செய்தபோது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 50 இலட்சம் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றுள்ளார் என்ற குற்றச்சாட்டு குறித்து உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு வலியுறுத்தி, ‘இலஞ்சம், ஊழல் மற்றும் வீணடிப்புக்கு எதிரான பிரஜைகள் சக்தி’ (புரவசி பலய) அமைப்பு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்தை அடிப்படையாகக் கொண்டு, சிங்கப்பூரில் வசிக்கும் சிதம்பரம் என்பவரால் வழங்கப்பட்ட சத்தியக்கடதாசியின் சான்றுகளுடன் இந்த முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.








