“டெங்கு அற்ற தேசத்தை உருவாக்குவோம் வாரீர்” என்ற தொனிப்பொருளில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்வு கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பேத்தாழை கிராம சேவகர் பிரிவில் நடைபெற்றது.
இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றம் மற்றும் மெதடிஸ்த திருச்சபை மருதநகர் “ஹனியெல்” சிறுவர் அபிவிருத்தி திட்டத்தின் பங்களிப்புடன் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

டெங்கு நோயிலிருந்து பாதுகாப்பு பெறும் வழிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு பேத்தாழை விபுலானந்த கல்லூரியில் இடம்பெற்றதுடன், வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொது சுகாதார பரிசோதகர் வளவாளராக கலந்து கொண்டு விளக்கமளித்தார்.
மேலும், பேத்தாழை கிராம சேவகர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் ஒன்றுகூடலில் டெங்கு காய்ச்சல் பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான விழிப்புணர்வு கருத்துக்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதானப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது வெற்றுக் காணிகள் மற்றும் பொது இடங்களில் தேங்கியிருந்த திண்மக் கழிவுப் பொருட்கள் அகற்றப்பட்டு சுற்றுச்சூழல் சுத்தப்படுத்தப்பட்டது.













