மிக் போர் விமான கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகளுக்காக நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் வழங்கிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பல மணி நேர விசாரணைகளின் பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
சர்ச்சைக்குரிய மிக் போர் விமான கொள்முதல் நடவடிக்கை தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதிக்கு நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய, இன்று (11) காலை நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையான கோட்டாபய ராஜபக்ஷவிடம், குறித்த கொடுக்கல் வாங்கல் தொடர்பில் அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
பல மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிதிக்குற்ற விசாரணைப் பிரிவிலிருந்து வெளியேறியுள்ளார்.








