செஞ்சோலை படுகொலையின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முன்தினம் (14) மட்டக்களப்பு YMCA மண்டபத்தில் நடைபெற்றது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், செஞ்சோலையில் உயிரிழந்த மாணவர்களின் உருவப்படங்களுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன், நினைவுச் சுடரும் ஏற்றப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், தமிழர்களின் காணி விவகாரம், அரசியல் பிரச்சினை மற்றும் வடக்கு–கிழக்கில் இடம்பெறுவதாகக் கூறப்படும் நில அபகரிப்புகள் தொடர்பில் அரசாங்கத்தை விமர்சித்தார்.
தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் நாட்டை பொருளாதார ரீதியாக முன்னேற்றுவது சாத்தியமில்லை எனத் தெரிவித்த அவர், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு அவசியம் என வலியுறுத்தினார்.
மேலும், வடக்கு–கிழக்கில் இந்தியா மேற்கொள்ள முன்வரும் முதலீடுகளுக்கு அரசாங்கம் உரிய ஒத்துழைப்பை வழங்கவில்லை எனக் குற்றஞ்சாட்டிய அவர், தமிழர்களின் பிரச்சினையில் இந்தியா அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.








