Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
செங்கலடி பொதுச் சந்தையின் பழைய கட்டிடத்தை அகற்ற ஏறாவூர் பற்று பிரதேச சபை தீர்மானம்!

செங்கலடி பொதுச் சந்தையின் பழைய கட்டிடத்தை அகற்ற ஏறாவூர் பற்று பிரதேச சபை தீர்மானம்!

2 hours ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

செங்கலடி பொதுச் சந்தையின் இரண்டு மாடிக் கட்டிடத்தை அகற்றுவதற்கும், அங்கு இயங்கி வரும் வர்த்தக நிலையங்களுக்கு மாற்று இடங்களை வழங்குவதற்கும் ஏறாவூர் பற்று பிரதேச சபை ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு, கிழக்கு மாகாண பிரதம பொறியியலாளர் அலுவலகம் விடுத்துள்ள பரிந்துரையின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் பற்று பிரதேச சபையின் 15ஆவது சபைக் கூட்டத்தில் தவிசாளர் மு.முரளிதரன் சமர்ப்பித்த விசேட தீர்மானம் தொடர்பான விவாதத்தின்போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது கருத்து தெரிவித்த பிரதேச சபை உறுப்பினர் செ.நிலாந்தன், செங்கலடி நகரம் ஏறாவூர் பற்றின் பிரதான நகரமாக இருப்பதால், அதனை திட்டமிட்ட முறையில் அபிவிருத்தி செய்து வர்த்தக நகரமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகள் பழமையான செங்கலடி பொதுச் சந்தையின் இரண்டு மாடிக் கட்டிடம் மக்கள் பாவனைக்கு உகந்ததல்ல என கிழக்கு மாகாண பிரதம பொறியியலாளர் அலுவலகம் அறிவித்துள்ளதாகவும், பொதுமக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு கட்டிடத்தை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சந்தைக் கட்டிடத்தை அகற்றுவதுடன் அங்கு இயங்கி வரும் வர்த்தக நிலையங்களுக்கு மாற்று இடங்களை வழங்குவது தொடர்பிலும், புதிய சந்தைக் கட்டிடத்திற்கான வடிவமைப்பு மற்றும் நகர அபிவிருத்தித் திட்டங்களை தயாரிப்பது தொடர்பிலும் விசேட குழுவொன்றை அமைக்க வேண்டும் என அவர் முன்மொழிந்துள்ளார்.

தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், தொழில்நுட்ப அதிகாரிகள், வர்த்தகர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய குழுவை அமைத்து, நவீன வசதிகளுடன் புதிய சந்தைக் கட்டிடத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், செங்கலடி நகரின் பிரதான வீதிகள், சந்தை வீதி மற்றும் வீதி சமிக்ஞை விளக்குகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தி நகரை வர்த்தக மையமாக அபிவிருத்தி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதனையடுத்து, செங்கலடி பொதுச் சந்தையின் இரண்டு மாடிக் கட்டிடத்தை அகற்றுதல், அங்குள்ள வர்த்தக நிலையங்களுக்கு மாற்று இடம் வழங்குதல் மற்றும் புதிய சந்தைக் கட்டிடத்தின் வடிவமைப்பு உள்ளிட்ட நகர அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் பரிந்துரைகளை முன்வைப்பதற்கான குழுவை அமைக்க ஏறாவூர் பற்று பிரதேச சபை ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

டெங்கு கட்டுப்பாட்டில் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிக்க புதிய முன்னோடித் திட்டம்!
செய்திகள்

டெங்கு கட்டுப்பாட்டில் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிக்க புதிய முன்னோடித் திட்டம்!

August 20, 2026
உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மீண்டும் உயர்வு!
செய்திகள்

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மீண்டும் உயர்வு!

August 20, 2026
புற்றுநோய் மருந்து தட்டுப்பாட்டுக்கு ஒரு வாரத்தில் தீர்வு; அமைச்சர் உறுதி
செய்திகள்

புற்றுநோய் மருந்து தட்டுப்பாட்டுக்கு ஒரு வாரத்தில் தீர்வு; அமைச்சர் உறுதி

August 20, 2026
பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் வேலைவாய்ப்பு தொடர்பான சட்டத் திருத்தம் நிறைவேற்றம்!
செய்திகள்

பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் வேலைவாய்ப்பு தொடர்பான சட்டத் திருத்தம் நிறைவேற்றம்!

August 20, 2026
மெகசின் சிறைச்சாலை சுவருக்கு மேல் வீசப்பட்ட பொதியில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் மீட்பு!
செய்திகள்

மெகசின் சிறைச்சாலை சுவருக்கு மேல் வீசப்பட்ட பொதியில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் மீட்பு!

August 20, 2026
விட்டால் வைத்தியர் சுகுணன் மொசாட் ஏஜென்ட் என்று கூறுவார்கள்; சாணக்கியன்
காணொளிகள்

விட்டால் வைத்தியர் சுகுணன் மொசாட் ஏஜென்ட் என்று கூறுவார்கள்; சாணக்கியன்

August 20, 2026
Next Post
பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் வேலைவாய்ப்பு தொடர்பான சட்டத் திருத்தம் நிறைவேற்றம்!

பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் வேலைவாய்ப்பு தொடர்பான சட்டத் திருத்தம் நிறைவேற்றம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.